யாழ் மாவட்ட செயலக ஒளி விழா சிறப்பாக இடம்பெற்றது.

0
520

யாழ் மாவட்ட செயலக நலன்புரிச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் 2020 ஒளி விழா யாழ் மாவட்ட செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரச அதிபர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருந்தார்

தற்போதுள்ள கொரோனா தொற்று அச்ச நிலையினை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற ஒளி விழா நிகழ்வில் கரோல் கீதம் இசைக்கப்பட்டு,மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,மேலதிக அரச அதிபர் (காணி)மற்றும் மாவட்ட செயலக துறை சார் தலைவர்கள்,ஊழியர்கள் பங்குபற்றியிருந்தனர்.

குறித்த நிகழ்வில் தற்போது உள்ள நிலைமைகளை விளக்கும் தொடர்பான சிறந்த நாடகம் ஒன்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் அரங்கேற்றப்பட்டது.