யாழ் மாவட்ட தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழில்  உலக சுற்றுலா தினம் அனுஷ்டிப்பு!

0
140

யாழ். மாவட்ட தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மத்திய கலாச்சார நிதியத்தின் அனுசரனையுடன் உலக சுற்றுலா தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

உலக சுற்றுலா தினத்தை முன்னெடுக்கும் முகமாக யாழ். பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக கல்லூரியின் சுற்றுலாத்துறை மாணவர்களுக்கு, சுற்றுலாத்துறையின் ஒரு பகுதியாகவும் அழிந்து செல்லுகின்றதாகவும் காணப்பட கூடிய தொட்டுணர முடியாத மரபுரிமைகளை  மையப்படுத்திய பயிற்சி பட்டறையும் முன்னெடுக்கப்பட்டதோடு மாலை 3 மணிமுதல் பாரம்பரிய கூத்துக்களும் இடம்பெறவுள்ளது.

இதன் பொழுது யாழ். பல்கலைக்கழக  வரலாற்றுத்துறை முன்னாள்  பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், பேராசிரியர் சிவலிங்கராஜா, யாழ். மாவட்ட தொல்லியல் திணைக்கள அதிகாரி பா.கபிலன், மத்திய கலாச்சார நிதியத்தின், யாழ். பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மாணவர்கள், பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.