யாழ். மிருசுவிலில் கனவில் வந்த விக்கிரகங்கள் நிஜத்தில் கண்டெடுப்பு!

0
359

யாழ்ப்பாணம் மிருசுவில் மன்னன் குறிச்சியில் வீட்டுக் காணியிலுள்ள நிலத்திலிருந்து 12 சிறிய விக்கிரகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

முத்தையா பாஸ்கரன் என்ற குடும்பத் தலைவர் தனது வீட்டுக் காணியில் விக்கிரகங்கள் உள்ளதாக கனவு கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனையடுத்து அவ்விடத்தை தோண்டிய போது பித்தளையிலாலான 12 சிறிய விக்கிரகங்களை குறித்த நபர் கண்டுள்ளார்.

சிவன் விக்கிரகம் ஒன்று, சிவலிங்கம் ஒன்று, வராகி அம்மன் விக்கிரகம் ஒன்று, ஆறுதலை முருகன் ஒன்று, சிவனும் பார்வதியும் இடப வாகனத்தில் அமர்ந்திருக்கும் விக்கிரகம் ஒன்று, ஒற்றைத்தலை நாகம் ஐந்து, ஐந்து தலை நாகம் இரண்டு ஆகிய விக்கிரகங்களே மீட்;கப்பட்டன.

அதனையடுத்து அவ்விடத்தில் கொட்டில் அமைத்து விக்கிரகங்கள் வைக்கப்பட்டு வழிபாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.