யாழ். வடமராட்சியில் தீக்கிரையாகிய வாகனம்!

0
87

யாழ்ப்பாணம், வடமராட்சி கரணவாய் கிழக்கு குருக்கள் குடியிருப்பு பகுதியில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜே.சி.பி வாகனம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஜே.சி.பி வாகனம் தீப்பற்றி எரிந்ததை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லியடி பொலிஸார், அயலவர்களின் உதவியுடன் தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்தில் ஜே.சி.பி வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக வாகன உரிமையாளரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்திதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.