ரிஷாத்துக்கு ஆதரவாக அம்பாறையில் சுவரொட்டிகள்

0
261

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டியில் ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்ய வலியுறுத்தியும், விரைவான விடுதலை கிடைக்க ஆவண செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுவரொட்டிகள் பிரதான வீதிகளிலும், உள்ளக வீதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனைகுடி ,இஸ்லாமபாத், சாய்ந்தமருது, மாளிகைக்காடு , நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், பொத்துவில், பகுதிகளில் இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.