பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் கைது செய்யப்பட்டமையை கண்டித்து கொண்டாடத்திற்குரிய நாளான நோன்புப் பெருநாள் தினத்தில் வீடுகளில் கறுப்புக் கொடியை பறக்கவிட வேண்டாம் எனவும் கொண்டாட்ட தினமான நோன்பு பெருநாள்
தினத்தில் கறுப்புக் கொடி தேவையில்லை என்றும் றிசாட் பதியுதீன் கைதுக்கான எதிர்ப்பை வேறொரு தினத்தில் வெளியிடுங்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நிந்தவூர் பிரதேசத்தில் நேற்றிரவு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டனர்.