லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கான புதிய விலை நாளை அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.