எரிபொருளை, அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில், கிளிநொச்சி தருமபுரம் பொலிசாரால், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தே நபரிடமிருந்து, 245 லீற்றர் டீசல், 478 லீற்றர் பெட்ரோல் மற்றும் 80 லீற்றர் மண்ணெண்ணெய் என்பனவற்றை, தருமபுரம் பொலிஸார் பறிமுதல் செய்துள்ள நிலையில், இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அதிக விலையில் எரிபொருளை விற்பனை செய்த நபர்களை, நாளையதினம், நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தருமபுரம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.