28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடமராட்சி கிழக்கு அம்பன் களப்பு பகுதியில் 75,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டன

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நன்னீர் மீன்பிடியாளர் தொழில் மேம்பாடு கருதி, அம்பன் களப்பு பகுதியில் 75 ஆயிரம் நன்னீர் மீன் குஞ்சுகள் இன்றைய தினம் விடப்பட்டன.

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி பிரிவின் நிதி அனுசரணையில், குறித்த மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

2 இலட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் திட்டத்தின் கீழ், இன்றையதினம் 75 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

மிகுதி மீன் குஞ்சுகள் இன்றிலிருந்து தொடர்ச்சியாக நன்னீர் ஏரியில் விடப்படவுள்ளன.

இன்றைய நிகழ்வில் கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி பிரிவு அதிகாரிகள், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரயந்த அமரசிங்க, அம்பன் நன்னீர் மீன்பிடியாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles