வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றம் இன்றைய தினம் காலை 8.45 அளவில் இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழாவில், விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, பல சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத கொடியேற்றம் இடம்பெற்றது.
கொடியேற்ற திருவிழாவில் அதிகளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து 16 நாட்கள் இடம்பெறவுள்ள உற்சவத்தில் விசேட திருவிழக்களாக எதிர்வரும் 22 ஆம் திகதி வெண்ணைத் திருவிழாவும், 23ஆம் திகதி துகில் திருவிழாவும், 24ஆம் திகதி பாம்பு திருவிழாவும், 25ஆம் திகதி திங்கட்கிழமை கம்சன் போர் திருவிழாவும், 26 ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும், 27ஆம் திகதி சப்பற திருவிழாவும், 28ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 29ஆம் திகதி சமுத்திரத் தீர்த்த திருவிழாவும், 30ஆம் திகதி கேணித்தீர்த்தமும் இடம்பெற்று அன்று மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.