வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வாகன பவனி

0
406

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும், அதனது தாய்க் கல்வி நிறுவனமான பற்றிக்கோட்ட செமினரியினதும் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பழைய மாணவர் ஒன்றுகூடல் வாரம் இன்று ஆரம்பமானது.

அதன் ஆரம்ப நிகழ்வாக நடை பவனி மற்றும் வாகன பவனி இடம்பெற்றது.
பழமை வாய்ந்த வாகனங்கள் பவனி வந்தன.

காலை 7 மணியளவில் கல்லூரி வாசலில் இருந்து ஆரம்பமாகிய வாக பவனி கோட்டைக்காடு, அராலி, செட்டியார்மடம், துணவி, நவாலி, ஆனைக்கோட்டை, மானிப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, சித்தங்கேணி, வட்டுகோட்டை வழியாக யாழ்ப்பாணக் கல்லூரியை வந்தடைந்தது.

இதன்போது பழைய கார், தட்டி வான் மோட்டார் சைக்கிள்கள் என்பனவற்றில் பழைய மாணவர்கள் பாடசாலை கொடிகளை ஏந்தியவாறு பவனி வந்தனர்.

ஜூலை 22ஆம் திகதி வரை பழைய மாணவர் ஒன்றுகூடல் வாரம் கோலகலமாக இடம்பெறவுள்ளதாக பழைய மாணவர் சங்க ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணக் கல்லூரியும் அதனது தாய்க் கல்வி நிறுவனமாகிய பற்றிக்கோட்டா செமினரியும் 1823 ஆம் ஆண்டு முதல் கடந்த 200 வருடங்களாக‌ வழங்கிய கல்விப் பணியினையும், சமூகப் பணியினையும் நினைவு கொள்ளும் வகையிலும், கொண்டாடும் வகையிலும், அவை குறித்துச் சிந்திக்கும் வகையிலும், கல்லூரியின் எதிர்காலப் பயணம் குறித்துத் திட்டமிடும் வகையிலுமாக‌ பழைய மாணவர் வார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

புலம்பெயர் தேசங்களில் இருந்து வருகை தந்துள்ள கல்லூரியின் பழைய மாணவர்களும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.