வர்த்தக நிலையம் முன்பாக சடலம் மீட்பு!

0
183

வவுனியா நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையம் முன்பாக இன்று அதிகாலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையம் முன்பாக எவ்வித அசைவுமின்றி ஈக்கள் மொய்த நிலையில் ஒருவர் உறங்கிய நிலையில் காணப்படுவதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டத்தை உறுதிப்படுத்தினர்.
சடலம் தடவியல் பொலிஸாரின் பரிசோதனைக்காக அவ்விடத்திலேயே காணப்படுவதுடன் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டவர் யாசகத்தில் ஈடுபடுபவராக இருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.