பொது மக்களுக்கான உணவுப் பொருட்களை தடையின்றி விநியோகிக்கும் வகையில் திருக்கோவில் பிரதேச வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் திருக்கோவில் பிரதேச செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் அத்தியாவசியப் தேவைகளுக்காக பிரயாணம் செய்தல் போன்றவற்றுக்கான அனுமதிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன் போது பிரதேசம் மாவட்டம் மற்றும் மாகாணங்களுக்குச் சென்று அனுமதிகளைப் முறையாகப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்ப படிவங்களும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தன.
இதேவேளை இவ் விண்ணப்பப் படிவங்களை கிராம சேவையாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள கூடியதாக இருப்பதுடன் இது தொடர்பான தெளிவுபடுத்தல்களும் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனினால் கிராம சேவையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவ் கூட்டத்தில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் திருக்;கோவில் பிரதேச வர்த்தக நிலைய உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.