வறட்சியான காலநிலை ஏற்பட்டால், மின்னுற்பத்திக்கு நீரை வழங்கக்கூடிய இயலுமை இல்லை என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
கண்டியில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இதனைக் கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நீர் முகாமைத்துவத்தை நாங்கள் செய்கின்றோம். அனைத்தையும் அவதானித்தே, விவசாயம் மற்றும் மின்சாரம் என்பனவற்றுக்கு நீர் விநியோகிக்கப்படுகின்றது. எனினும், விவசாயத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
இந்தநிலையில், வறட்சியான காலநிலையுடன் நீர்மட்டம் குறைவடைந்தால், மின்னுற்பத்திக்கு நீரை வழங்க முடியாது என நாம் அறியப்படுத்தியுள்ளோம்.
பயிரிடப்பட்ட நிலங்களைப் பாதுகாக்க வேண்டும்” – என்றார்.