வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் மஞ்ச உற்சவம்

0
242

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மஞ்ச உற்சவம் நேற்று மாலை இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக் கடல் ஓரம் அமர்ந்து மக்களுக்கு அருள் பாலிக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மனின் பங்குனித் திங்கள் நிகழ்வுகள் கடந்த வாரங்களில் சிறப்பு பூசை வழிபாடுகளுடன் நடைபெற்று இறுதி திங்களான நேற்று அம்மன் மஞ்சத்தில் அமர்ந்து மக்களுக்கு அருள் பாலித்துள்ளார்.

ஆண்டு தோறும் பங்குனித் திங்களின் இறுதித் திங்களில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் மஞ்ச உற்சவம் இடம்பெறுவது வழமை.

இம்முறையும் பங்குனித் திங்களின் இறுதித் திங்களான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றலுடன் மஞ்ச உற்சவம் இடம்பெற்றது.

வசந்த மண்டபத்தில் விசேட வழிபாடு பூசைகள் இடம்பெற்று பின்னர் அம்மன் எழுந்தருளி உள்வீதி வலம் வந்து வெளி வீதியில் மஞ்சத்தில் உலாவந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

பல பக்கத்தர்கள் வடம் பிடித்து மஞ்சத்தினை இழுத்து வந்து அம்மனின் அருளாசியினைப் பெற்றுக்கொண்டனர்.