வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின்
உறவுகள் ஆர்ப்பாட்ட பேரணி

0
199

அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைதி வழி ஆர்ப்பாட்ட பேரணியும் தீபம் ஏற்றி உறுதி மொழி எடுத்தல் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இன்று திருக்கோவில் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு இருந்தவர்கள் கறுப்புநிற ஆடை அணிந்து கைகளில் உறவுகளின் புகைப்படங்கள் மற்றும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோவில் பிரதேச தம்பிலுவில் பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதிக்கு முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக திருக்கோவில் மணிக்கூட்டுச் சந்தி வரைச் சென்று நிறைவு பெற்றதுடன் சர்வதேச மனித உரிமை தினத்தினை முன்னிட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளுக்கான நீதிவேண்டி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 14வது ஆண்டு நிறைவையொட்டியும் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.