வலிமேற்கு பிரதேச செயலர் பிரிவில்-பயணக்கட்டுப்பாடு நேரத்தில் விசேட நடைமுறை.

0
395

வலி.மேற்கு பிரதேச செயலர் பிரிவில்-பயணக்கட்டுப்பாடு நேரத்தில் விசேட நடைமுறை பின்பற்றப்படவுள்ளது

மரக்கறி, மீன், பலசரக்கு பொருட்கள்மக்கள் கேட்டால் கொண்டு சென்று கொடுக்க முடியும்
வலி.மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மீன் மற்றும் மரக்கறிகளை விற்பனை செய்பவர்களும் பலசரக்கு பொருட்களை வழங்குபவர்களும் அந்தந்த வீட்டார் கோரிக்கை விடுத்தால் கொண்டுசென்று கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வியாபாரிகள் தத்தமது இடங்களில் உள்ள குடும்பங்களுக்கே மேற்படி பொருட்களை வழங்க முடியும். அதுவும் அந்த வீட்டின் வாசலில் மட்டும் நின்று பொருட்களைக் கொடுத்துவிட்டு வரவேண்டும். பொருட்களை கொடுப்பவரும் வாங்குபவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். 
ஏற்கனவே மேற்படி விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே இச்செயற்பாட்டை முன்னெடுக்க முடியும். கிராமங்களின் உள்ளே வீதிகள், சந்திகளில் பொருட்களை வைத்து விற்பனை செய்ய முடியாது. 
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர்களும் மானிப்பாய் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் கண்காணிப்பை மேற்கொள்வர். மேற்படி நடைமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர்கள் கிராம சேவையாளர்களுடன் தொடர்புகொண்டு இது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ள முடியும். 
பயணத்தடை தளர்த்தப்படும்போது சந்தைகள், கடைகளில் அதிகளவான மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் நோக்குடன் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதேவேளை, வியாபாரிகளுக்கு பாஸ் வழங்கும் நடைமுறைகளால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன எனவும் இதனால் அந்த நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது எனவும் வலி.மேற்கு பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.