வவுனியாவில் சடலம் மீட்பு

0
17

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பசார் வீதியில் உள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் நேற்றையதினம் இரவு வீட்டிலிருந்து தொழில் நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார். இந்தநிலையில் குறித்த குடும்பஸ்தர் பட்டறை அமைந்துள்ள மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த நபர் மாடிக்கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்ததால் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சாந்தசோலை பகுதியை சேர்ந்த 40 வயதான சுப்பையா ஆனந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.