வவுனியா பேயாடிகூளாங்குளம் பகுதியில், ஏ9 பிரதான வீதியில், சாரதி பயிற்சி பாடசாலை வாகனம் விபத்தில் சிக்கிய போதும், பாதிப்பு ஏற்படவில்லை.
சாரதி பயிற்சி வாகனம், வீதியை விட்டு விலகி, அருகிலுள்ள வயல் காணிக்குள் சென்றுள்ளது. எனினும், பயிற்சியில் ஈடுபட்ட எவருக்கும், எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
வாகனப் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த வாகனம், எதிர்பாராமல், திடீரென்று வீதி அருகிலுள்ள வயல் தரைக்குள், நேற்று சென்று புதையுண்டுள்ளது.
நீண்ட நேரத்தின் பின்னர், வேறு ஒரு வாகனத்தின் உதவியுடன், புதையுண்ட வாகனம், வயல் தரையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், வாகனச் சாரதி பயிற்சியில் ஈடுபடும் போது, பயிற்றுவிப்பாளரின் கவன குறைவாலே, இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.