வவுனியாவில் டெங்கு ஒழிப்பு தீவிரம்

0
27

வவுனியாவில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட செயல்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து நகர சபையின் பங்களிப்புடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை துப்புரவு செய்யும் பணியை முன்னெடுத்தனர்.

வவுனியா நகரம், வைரவப்புளியங்குளம், இறம்பைக்குளம், ராணிமில் வீதி, வெளிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குழுவாக சென்ற இவர்கள் வீதியோரங்கள், வாய்க்கால்களில் காணப்பட்ட பொலித்தீன்கள், வெற்றுப் போத்தல்கள், சிரட்டைகள், மட்பாண்டத் துண்டங்கள், ரயர்கள் மற்றும் நீர் தேங்கி நிற்கக் கூடிய பொருட்களை அகற்றி அப் பகுதியைச் சுத்தம் செய்தனர்.