வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் பலி!

0
717

வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவ புளியங்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த ஆசிரியர் அந்தப் பகுதியிலுள்ள ஆலயத்தின் தேர்த் திருவிழாவுக்காக குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்றுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாகியும் அவரைக் காணவில்லை என்பதால், அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தேடுதல் மேற்கொண்டதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து, நீண்ட நேர தேடுதலின் பின்னர் குறித்த ஆசிரியரின் சடலம் குளத்திலிருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியரான 33 வயது பரந்தாமன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

இவர் இராணுவத்தின் கடேட் படைப்பிரிவின் கப்டன் தரத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.