வவுனியாவில் போதைப்பொருள்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் விஷேட நடவடிக்கையின் போது வவுனியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு இவர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் கஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதில் வைரவ புளியங்குளம் பகுதி மற்றும் சிவபுரத்தைச் சேர்ந்த இருவர்களிடமிருந்து 620 மில்லிக்கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மற்றைய மூவரிடமிருந்து 04 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.