நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் இறுதியாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் இதுவரை 595 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இறுதியா பதிவான கொரோனா தொற்று மரணம் வவுனியா மற்றும் யாழ்வெல ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவரும் பதுளை யாழ்வெல பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண்ணொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை 183 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 94 519 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 91 272 பேர் குணமடைந்துள்ளதோடு , 2583 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.