வவுனியா ஓயார் சின்னக்குளம் பகுதியில் வாள்வெட்டு : இருவர் காயம்

0
121

வவுனியா ஓயார் சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு, ஓயார் சின்னக்குளம் பகுதிக்கு, வாகனம் ஒன்றில் மதுபோதையில் சென்ற குழுவினர், அங்கு நின்ற இருவரை, வாளால் வெட்டியுள்ளனர்.

இதனால், ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.