வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியிலிருந்து இளைஞனொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்…
பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்து வந்த குடும்பஸ்தர் நேற்று இரவு வீட்டிலிருந்து தொழில் நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்திலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சாந்த சோலை பகுதியில் வசித்த சுப்பையா ஆனந்தன் என்ற 40 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் மாடிக்கட்டடத்திலிருந்து தவறி வீழ்ந்ததால் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.