28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வவுனியா சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட உணவுத்தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐவரால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கைதானவர்களை விடுவிக்க வலியுறுத்தி வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி, அருட்தந்தை ரமேஸ், சட்டத்தரணி க.சுகாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் இணக்கத்துடன் சிறைச்சாலைக்கு சென்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு நீராகாரம் கொடுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணி பொலிசாரால் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தம்மை விடுவிக்க விலியுறுத்தி அவர்களில் 5 பேர் கடந்த செவ்வாய்கிழமை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles