வவுனியா நகர்ப் பகுதியில், 3 பெண்கள், நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று விடுதலை

0
127

வவுனியா நகர்ப் பகுதியில், விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 3 பெண்கள், நேற்று, வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, நகர்ப் பகுதியில், நேற்று சோதனை மேற்கொண்ட, வவுனியா போதை ஒழிப்பு பொலிசார், விபசார தொழிலில் ஈடுபட முயற்சித்த குற்றச்சாட்டில், 3 பெண்களை கைது செய்தனர்.
செட்டிகுளம், கிளிநொச்சி, காலி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அவர்கள், இன்று, வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், நூறு ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.