வவுனியா பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள், பகிஸ்கரிப்பில்!

0
180

வவுனியா பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள், இன்று, அடையாள பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இன்று, நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்விசார் ஊழியர்கள், அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். அந்தவகையில், வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த கல்விசார் ஊழியர்களும், அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அநீதியான அரசாங்கத்தின், அசாதாரணமான வரி விதிப்புக் கொள்கை மற்றும் மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம் என்ற தொனிப்பொருளில், இந்த பண்பகிஸ்கரிப்பு இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக, இன்று, வவுனியா பல்கலைக்கழகத்தில், எந்தவிதமான கல்வி நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என, வவுனியா பலகலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் எஸ்.திருஞானசம்பந்தர் தெரிவித்தார்.