வவுனியா – வைரவபுளியங்குளத்தில் உள்ள மதுபான நிலையமொன்று இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.அதிகாலை 3.50 மணியளவில் தீபற்றிய நிலையில், வவுனியா நகரசபை தீ அணைக்கும் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டும் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், கட்டிடம் முழுவதும் தீ பரவியது.
குறித்த தீ விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.