சேனநாயக்க சமுத்திரத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டு, மேலதிக நீர் வெளியேற்றப்படுவதால், அம்பாறை காரைதீவுப்
பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
காரைதீவிலிருந்து அம்பாறைக்குச் செல்லும் பிரதான வீதியில் மூன்றடிக்கு மேல் நீர் ஊடறுத்துப் பாய்வதால், கனரக வாகனங்கள் மாத்திரமே வீதியால்
பயணிப்பதை அவதானிக்க முடிகிறது.
காரைதீவில் சுமார் 50 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் காரைதீவு பெண்கள் பாடசாலையில் தற்காலிகமாக
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.