வாழைச்சேனையில் இருவருக்கு கொரோனா தொற்று

0
455

வாழைச்சேனை கல்குடா வலயக் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் ஆசிரியர்கள், மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்களுக்கும் முதற்கட்டமாக பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன.

இதேவேளை ஓட்டமாவடியில் 111 பேரிடம் மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையில் இருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மருதநகர் கிராமத்தில் மரண வீட்டில் கலந்து கொண்ட, 41 பேருக்கு மேற் கொண்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் டி.ஸ்ரிவ் சன்ஜிவ் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்றிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.