வாழைச்சேனையில் தடுப்பூசிகள் ஏற்றல்

0
391

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்கள்,கிராமசேவகர்கள்,சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் பொலிசாருக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

வாகரை,கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுகளில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்கள் பொலிசார்,விசேட அதிரடிப் படையினருக்கும் தடுப்பூசிகள் ஏற்றும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பிரதேசத்தில் உள்ள அரச தனியார் அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்கள்,கற்பினி தாய்மார்கள்,60 வயதிற்கு மேற்பட்டோர்கள்,நீரழிவு நோய்,குருதி அழுத்தத்திற்கு பாதிப்புற்றவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

இவ் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக்,வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ முதலி ஸ்டீவ் சஞ்சீவ் ,வாகரை சுகாதார வைத்திய அதிகாரி வை.விவேக்,கிரான் சுகாதார வைத்திய அதிகாரி த.திவாகரன் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.