இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் நினைவுகூரப்படுகிறது.
அதற்கமைய மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை சிலர் இன்று அனுஷ்டித்தனர்.
இந்த நிலையில், நினைவு கூரலில் ஈடுபட்ட எட்டுப் பேரை கைது செய்துள்ளதுடன், ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.