26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வாழைச்சேனையில் 34 பேருக்கு பி.சி.ஆர், 30 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை

மட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இன்று பி.சி.ஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

வியாபாரரிகள், கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள், பிறந்தநாள் நிகழ்வு நடாத்தியவர்கள், அதில் கலந்து கொண்டவர்கள் என 34 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை மிராவோடை கிராம சேவகர் பிரிவில் எழுந்தமானதாக 30 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எவருக்கும் கொரோனா தொற்று இனம் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி அலவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்படுவதனால் பி.சி.ஆர்.மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த பரிசோதனையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles