வாழைச்சேனை புனித சென் திரேசா முன்பள்ளியில் சிறுவர் தின நிகழ்வு

0
128

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை புனித சென் திரேசா முன்பள்ளியில் மாணவர்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்வில் மலரும் மொட்டுக்கள் என்ற தொணிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன்போது நாடகம்,பேச்சு,நடனம், மாறுவேடம் என பல்வேறு நிகழ்கள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் சென் திரேசா முன்பள்ளி ஆசிரியர்களான
அ.ஜெசிந்தா, ஜோர்ஜ்செரிக்கா மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.