மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்
கரை வலை மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் உழவு இயந்திரத்தில் முறக்கொட்டான் சேனை பகுதியில் இருந்து கிரான் நாகவத்தை கடற்கரைப் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக ஐவர் உழவு இயந்திரத்தில் சென்ற நிலையில் பிரதான வீதியில் இருந்து குறுக்கு வீதிக்கு உழவு இயந்திரத்தை திருப்பும் போது பின்னால் வந்த உழவு கார் இயந்திரத்துடன் மோதி உளவு இயந்திரத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கார் சாரதி உட்பட உழவு இயந்திரத்தில் இருந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
முறக்கொட்டன்சேனை தேவாபுரப்பகுதியைச் சேர்ந்த 46வயதுடைய நல்லராசா நேசராசா என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
காரில் வந்தவர்கள் களுதாவளை. கோவில் பூசை ஒன்றுக்காக வந்தவர்கள் என தெரியவருவதுடன் காரை செலுத்தியவர் வாழைச்சேனை
ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் இருவர் சிகிச்சை பெற்று வருவதுடன் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்த சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவரின் சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பரிசோதனையின் பின்னர் உறவினர்கள் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய கார் மற்றும் உழவியந்திரம் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.