28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்தார் ரணில்!

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமானவிஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கும் விஜயம் செய்திருந்தார்,

கந்தர்மடம் பலாலி வீதியில் உள்ள விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட நாட்டின் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் கலாசார முறைப்படி ஆராத்தி எடுத்து வரவேற்றதோடு இந்து குருமார் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்ததோடு ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கினர்,தொடர்ந்து

ரணில் விக்கிரமசிங்க யாழ் மாவட்டஐக்கிய தேசிய கட்சியின்உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் வைத்தியர்கள்,புத்திஜீவிகள்,விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடியதோடு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பிலும் உரையாற்றினார்.

குறித்த சந்திப்பின்போது ஐக்கிய தேசிய கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்,

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles