போயா விடுமுறை தினமாகிய இன்றைய தினம் யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த மூவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் செயல்படும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதி, கலட்டி மற்றும் முலவை சந்திப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 117 சிறிய மதுபான போத்தல்களும் 9 பெரிய மதுபான போத்தல்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.