அம்பாரை விநாயகபுரம் அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்தி பெருவிழாவின் பக்தி ததும்பும் தீமிதிப்பு பக்தர்களின் அரோகரா எனும் வேண்டுதலுடன் இன்று நடைபெற்றது.சிறப்புமிக்க பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி பெருவிழா கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற சங்காபிசேத்துடனும் 04ஆம் திகதி இடம்பெற்ற கும்பம் வைத்தலுடனும் ஆரம்பமானது.தொடர்ந்து 05ஆம் வழிபாடுகள் நடைபெற்று 06ஆம் திகதி பாற்குடபவனியும் 08ஆம் திகதி சக்தி பூஜையும் நடைபெற்றது.
நேற்று மாலை ஆரம்பமான சக்தி பூஜைகளை தொடர்ந்து இரவு தீமூட்டும் கிரியைகள் இடம்பெற்றதுடன் இன்று இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
சக்தி பெருவிழாவின்; தீமிதிப்பு உள்ளிட்ட வழிபாட்டுக்கிரியைகளை ஆலய பூசகர் சக்தி உபாசகர் சிவத்திரு மாணிக்கவாசம் மற்றும் அவரது சீடர்கள் நடாத்தி வைத்ததுடன் ஆலய சங்காபிசேக கிரியைகள் சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் நடாத்தி வைத்தார்.