களனி பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவு பிரதானி, சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி என்.டி.ஜி. கயந்த குணேந்திர விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.நேற்றிரவு குருநாகல் பகுதியிலிருந்து மீரிகம நோக்கி வேனொன்றில் பயணித்த போதுஇ குறித்த வேன் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதே திசையில் பயணித்த பாரவூர்தியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தவிபத்தில் விரிவுரையாளர் உயிரிழந்ததுடன்இஅவரது 3 பிள்ளைகள்இ மனைவி மற்றும் ஏனைய இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலம் மீரிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்து விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.