‘விவசாயிகள் சிறந்த முறையில் செயற்பட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்’: மட்டு. கமக்காரர்கள் அதிகார சபையின் உபசெயலாளர் தெரிவிப்பு

0
165

அரசியல்வாதிகள் மோசமான நிலைக்கு நாட்டினை கொண்டுசெல்லாமல், விவசாயிகளை சிறந்த முறையில் செயற்படுவதற்கு நடவடிக்கைகளை
முன்னெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகாரசபையின் உபசெயலாளர் நிரஞ்சன் தெரிவித்தார்.
விவசாய அமைச்சர் தரகுப்பணத்தினை மட்டுமே நோக்காக கொண்டுசெயற்படுவதன் காரணமாக வடகிழக்கு மாகாண விவசாயிகள் கடும் பாதிப்பினை
எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.