வி.தர்மலிங்கத்தின் 37 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு

0
189

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 37 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு, இன்று, யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில், இன்று காலை 7.00 மணியளவில், வலிகாமம் தெற்கு பிரதேச சபை உபதவிசாளர் இ.பரமேஸ்வரலிங்கம் தலைமையில், நினைவஞ்சலி இடம்பெற்றது.
இதன் போது, நினைவுத் தூபிக்கு, மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், அமரர் வி.தர்மலிங்கத்தின் மகனும், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சமூக செயற்பாட்டாளர் ம.செல்வின், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், உள்ளுராட்சி சபை தவிசாளர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
23 வருடங்கள், மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஸ்வநாதர் தர்மலிங்கம், 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி, படுகொலை செய்யப்பட்டதுடன், இதே நாளிலேயே, கோப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.ஆலாலசுந்தரமும், படுகொலை செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.