வெடுக்குநாரி மலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்

0
298

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வெடுக்கு நாறி மலை ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று விஜயம் செய்தார். பாரம்பரியமாக இந்துக்களினால் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பூஜை வழிபாடுகளை தொடர்வதற்கு, அரசாங்க திணைக்களங்கள் சிலவற்றின் கடமைசார் செயற்பாடுகள் இடையூறாக அமைந்துள்ள நிலையில், குறித்த பகுதிக்கு இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப் படுத்தப்படும் என தெரிவித்தார்.

குறித்த பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைவரின் செயற்பாடுகள் அமைவது அவசியம், எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக பிரதேச மக்களின் கருத்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் கேட்டறிந்த அமைச்சர், மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்க திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையுமாயின், அவை தொடர்பாக கரிசனை செலுத்தப்படும் என்று உறுதியளித்தார். வெடுக்கநாறி மலைக்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விஜயத்தில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனும் இணைந்திருந்தார்.