வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகத்தினர் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு!

0
314

வவுனியா வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிடும் விதமாக, ஆலய நிர்வாகத்தினரால், மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட பேரணி, எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு, வவுனியா கந்தசாமி ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு, வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றடைய உள்ளது.

இதனால், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமயப் பெரியோர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்புக்களும், பேதங்களை மறந்து பேரணியில் பங்கேற்று, மத ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கான கோரிக்கையை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.