நலிவுற்ற பெண்கள் சிறுவர்கள் தொடர்பான சமூக அபிவிருத்தித் திட்டம் எனும் நிகழ்ச்சி அமுலாக்கத் திட்டத்தின் பிரதேச மட்ட சிறுவர் பாதுகாப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வெருகல் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
பிரதேச பொதுமக்கள்,சிறுவர் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள்,பெண்கள்,இளைஞர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், கிராம உத்தியோகத்தர்கள்,பொலிஸார், பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறுவர்கள் தொடர்பான அத்தனை பிரச்சினைகளும் நிறைந்த ஒரு இடமாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுவது வருத்தமளிப்பதாக பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் ஆதங்கம் வெளியிட்டார்.

கலந்துரையாடலில் ஈச்சிலம்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி லக்மல் பாலசூரிய, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ரீ.திலீப்குமார்,சிறுவர் நன்னடத்தை மூதூர் அலுவலக பொறுப்பதிகார் ஐ.அருள்செல்வன், பிரதேச செயலக முகாமைத்துவ சேவைகள் அலுவலர் எஸ்.பிறியங்கா, சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ். அருட் செல்வம் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சிறுவர்கள், பெண்கள் தொடர்பானதும் பல்வேறு சமூகச் சீரழிவுகள் தொடர்பானதுமான பிரச்சினைகள் கவனத்தில் கொண்டு வரப்பட்டு அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டன.
