ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸத்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் நினைவு தினம் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்பட்டது.
நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆன் நிகழ்வும், துஆ பிரார்த்தனையும் ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம்.நழீம் தலைமையில் இடம் பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸின் மத்திய குழு மற்றும் தாருஸ்ஸலாம் ஏறாவூர் கிளை ஏற்பாட்டில் ஏறாவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள முஹைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் பிராத்தனை இடம்பெற்றது.
கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் அவர்கள் கலந்து கொண்டு விசேட நினைவுப் பேருரையினை நிகழ்த்தினார்.
நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம் எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரது பங்கேற்புடன் இடம்பெற்றது.
Home கிழக்கு செய்திகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸத்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்பட்டது