ஹிக்கடுவை கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜைகள் மீட்பு !

0
56

ஹிக்கடுவை கடலில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு ரஷ்ய பிரஜைகள் ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 வயதுடைய நபரும் 39 வயதுடைய பெண்ணும் , 07 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகளுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ரஷ்ய பிரஜைகள் நால்வரும் நேற்று திங்கட்கிழமை (16) ஹிக்கடுவை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது அங்கு கடமையில் இருந்த ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் ரஷ்ய பிரஜைகள் நால்வரையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.