எதிர்வரும் 29ம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம் பெறவுள்;ள 12 வது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்
பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
‘டிஜிட்டல் டிரான்ஸ்போமேசன் போர் எ சஸ்டேனபில் பியுட்சர்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள மாநாட்டிற்கு பிரித்தானியாவின்
‘N|ட் ஒப் ஸ்கூல் ஒப் கம்பியுட்டிங் அன்ட் எஞ்சினியரிங்’ பேராசிரியர் கமால் விச்கோம் பிரதான பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ளார்.
நிகழ்வில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், நூலகர்கள், பேராசிரியர்கள், திணைக்களங்களின்
தலைவர்கள், மற்றும் விரிவுரையாளர்கள், பிரதி நிதியாளர் என பலரும் கலந்து கொண்டணர்.
மாநாட்டில் 200 ஆராச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.