29 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

13-அடி நீள ராட்சச முதலை; வாயில் மனித உடல்: சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது பினாலஸ் கவுன்டி பகுதி.

இப்பகுதியின் ஷெரீப் அலுவலகத்திற்கு அங்குள்ள நீர்நிலை ஒன்றில் ஒரு உடல் தென்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக அதிகாரிகள் களத்திற்கு சென்றனர்.

சம்பவ இடமான ரிட்ஜ்க்ரெஸ்ட் பகுதியில் 121-வது தெருவிற்கும் 134-வது வடக்கு நிழற்சாலைக்கும் அருகில் உள்ள நீர்நிலையில் ஒரு 13-அடி நீள முதலை தென்பட்டது.

அதன் வாயில் ஒரு மனித உடலின் பாகம் தெரிந்தது. இதனையடுத்து ஷெரீப் உத்தரவின் பேரில் அந்த முதலை சுடப்பட்டது.

அதிகாரிகள் அதன் வாயிலிருந்த மனித உடல் பாகங்களை ஆய்வுக்காக பத்திரமாக வெளியில் எடுத்தனர். இந்த நடவடிக்கைக்கு ஷெரீப் அலுவலகத்தினருடன் அம்மாநில மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டனர்.

விசாரணையில், இறந்தது 41 வயதான சப்ரீனா பெக்காம் எனும் பெண்மணி என தெரிய வந்துள்ளது. சில மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

“இவ்வளவு நீளமுள்ள ஒரு ராட்சச முதலை இங்குள்ள ஏரியில் இருக்கலாம் என நினைத்து கூட பார்த்ததில்லை” என இச்சம்பவம் குறித்து டெர்ரி வில்லியம்ஸ் எனும் அப்பகுதிவாசி தெரிவித்தார். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

எரிபொருள் விலையில் திருத்தம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு...

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2022 (2023) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள்...

ரிதிகமவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

ரிதிகமஇ கல்லவத்தஇ நிகபிட்டியவில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் 3 பேர் 48 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு ஒன்றில் வெடிப்புச் சம்பவம் தொடர்பில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

எரிபொருள் விலையில் திருத்தம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு...

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2022 (2023) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள்...

ரிதிகமவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

ரிதிகமஇ கல்லவத்தஇ நிகபிட்டியவில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் 3 பேர் 48 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு ஒன்றில் வெடிப்புச் சம்பவம் தொடர்பில்...

காஸாவில் மீண்டும் போரை தொடங்கியது இஸ்ரேல்

 7 நாட்கள் போர்நிறுத்தத்தை நிடிப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஹமாஸ் மீதான போரை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. ஹமாஸ் போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக...

முதல் ஒன்பது மாதங்களில் 485 எயிட்ஸ் நோயாளர்கள்இ 43 இறப்புகள் பதிவு

இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கை 485 பதிவுசெய்துள்ளது, இது 2022 இல்...