ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் 14 மாணவர்களது மாணவ அந்தஸ்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் உபவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களுக்கான மாணவ குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையிலான அமைதியின்மை மோதலாக மாறக் கூடும் என கருதி கடந்த 18 ஆம் திகதி விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களையும் வெளியேற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் அடங்கிய ஐவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உபபேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.